FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மத்திய சிறையில் சீனாவின் ட்ரோன்?

போபால் சிறை வளாகத்தில் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுப்பு

Updated On : 9 ஜனவரி 2025, 7:45 pm IST
கோப்புப் படம்
பகிர்:

போபால் சிறை வளாகத்தில் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் போபாலில் உயர் பாதுகாப்பைக் கொண்டுள்ள மத்திய சிறைக்குள் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய சிறையின் பி பிளாக்கில் 30 முதல் 40கி எடையிலான கருப்புநிற ட்ரோன் ஒன்றை காவல் அதிகாரி கண்டெடுத்தார்.

சிறை வளாகத்தில் ட்ரோன் தரையிறங்குவதை யாரும் பார்க்கவில்லை என்றும் கூறுகின்றனர். சிறையின் அருகில் குழந்தைகள் விளையாடிய ட்ரோனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

2600 கைதிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட 151 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சிறையில் 3600 கைதிகள்வரையில் உள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளும் இந்த சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments