தில்லி முதல்வர் அதிஷி கோப்புப் படம்
இந்தியா

தில்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு!

தில்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

தில்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பொதுப்பணித் துறை அதிகாரி மீது தில்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜனவரி 7 ஆம் தேதி அரசு வாகனத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக முதல்வர் அதிஷிக்கு எதிராக தேர்தல் நடத்தும் அதிகாரி முதலில் புகார் அளித்தார்.

விசாரணையைத் தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்திற்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்தியதாக தில்லி முதல்வர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக கோவிந்த் புரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல் உதவி ஆணையர் கல்காஜியிடம் புகார் கடிதம் அளிக்கப்பட்டது.

இதுபற்றி முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, “மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், அரசியல் நோக்கங்களுக்காக அரசு வாகனத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

தேர்தலின் போது பிரசாரம் தொடர்பான பயணங்களுக்கு அரசு வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT