FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உச்ச நீதிமன்ற நீதிபதியாக வினோத் சந்திரன் பதவியேற்பு!

உச்ச நீதிமன்ற நீதிபதியாக வினோத் சந்திரன் பதவியேற்றது பற்றி..

Updated On : 16 ஜனவரி 2025, 12:01 pm IST
தலைமை நீதிபதி கே. வினோத் சந்திரன்
பகிர்:

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே. வினோத் சந்திரனுக்கு இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா வியாழக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நீதிபதி சந்திரன் பதவியேற்றதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 34 நீதிபதிகளில் 33 பேராக உயர்ந்துள்ளது.

பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. வினோத் சந்திரனை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியத்தின் முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

Advertisement

Advertisement

தலைமை நீதிபதி கன்னா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், ஜனவரி 7ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சந்திரனின் பெயரைப் பரிந்துரைத்தது.

கேரள உயா்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2011-இல் பதவியேற்ற கே.வினோத் சந்திரன், கடந்த 2023-இல் பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். கேரள உயா்நீதிமன்ற நீதிபதியாக 11 ஆண்டுகளுக்கு மேலாகவும், பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஓராண்டுக்கு மேலாகவும் அனுபவம் கொண்டவா்.

பணிமூப்பு அடிப்படையில் ஒட்டுமொத்த உயா்நீதிமன்ற நீதிபதிகளில் 13-ஆவது இடத்தில் உள்ள இவா், கேரள உயா்நீதிமன்றத்தைச் சோ்ந்த நீதிபதிகளில் முதலிடத்தில் உள்ளாா். அத்துடன், கேரள உயா்நீதிமன்றத்தைச் சோ்ந்த நீதிபதிகள் யாரும் உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியில் இல்லை என்பதையும் கருத்தில் கொண்டு, கே.வினோத் சந்திரனை பரிந்துரைக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக கொலீஜியம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments