இந்தியா

நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது!

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

DIN

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

பாந்த்ராவில் உள்ள நடிகர் சைஃப் அலி கானின் வீட்டில், மர்மநபர் ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். அதைத் தடுக்கவந்த சைஃப் அலிகானை அந்த மர்ம நபர் கத்தியால் தாக்கியதில், அவர் பலத்த காயம் அடைந்தார்.

சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரைக் கண்டுபிடிக்க மும்பை காவல்துறை 20 தனிப்படைகளை அமைக்கப்பட்டன.

சத்குரு ஷரணில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை முயற்சியின் போது நடந்த தாக்குதலுக்குப் பிறகு, தாக்குதல் நடத்திய நபரின் உருவம் பதிவான கண்காணிப்பு கேமராக் காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

அதன்படி, நடிகர் சைஃப் அலிகான் தாக்கப்பட்டு 30 மணி நேரத்திற்கும் மேலான நிலையில், மும்பை காவல்துறையினர் சந்தேகப்படக்கூடிய ஒருவரை விசாரணைக்காக வெள்ளிக்கிழமை பாந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், அவரிடம் தாக்கப்பட்டதற்கான விவரம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT