முகப்பு
இந்தியா

3 மாவட்டங்களில் நிர்வாகக் குழு கூட்டம்: மமதா பானர்ஜி

மூன்று மாவட்டங்களில் நிர்வாகக் குழு கூட்டம் பற்றி..

Updated On : 18 ஜனவரி 2025, 11:52 am IST
மமதா பானர்ஜி - ANI
பகிர்:

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் அடுத்த வாரம் மூன்று மாவட்டங்களில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் என அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

முதல் கூட்டம் ஜனவரி 20 ஆம் தேதி முர்ஷிதாபாத்தில் நடைபெறுகிறது. முர்ஷிதாபாத் கூட்டத்திற்குப் பிறகு, பானர்ஜி மால்டா மற்றும் அலிபுர்துவாரில் நிர்வாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

முர்ஷிதாபாத்தின் லால்பாக் நவாப் பகதூர் நிறுவன மைதானத்தில் நிர்வாக ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது .இந்த கூட்டத்தில் பங்கேற்க திங்கள்கிழமை, முதல்வர் முர்ஷிதாபாத் செல்லவுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

திங்கள்கிழமை மால்டாவுக்குச் செல்லும் முதல்வர், ஜனவரி 21ஆம் தேதி அங்கு ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்.

ஜனவரி 22 அன்று அலிபுர்துவாரில் பானர்ஜி நிர்வாக மறு ஆய்வுக் கூட்டத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அடுத்த நாள் அலிபுர்துவாரில் உள்ள சுபாஷினி தேயிலை எஸ்டேட்டில் நேதாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடுவார் என்று அந்த அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.