அரவிந்த் கேஜரிவால் 
இந்தியா

தேர்தல் ஆணையத்தில் கேஜரிவால் மீது பாஜக வேட்பாளர் புகார்!

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா புகார்.

DIN

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புது தில்லி தொகுதி பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி தில்லி பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப். 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் புது தில்லி தொகுதி வேட்பாளருமான அரவிந்த் கேஜரிவால், தனது தொகுதி வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

நேற்று(ஜனவரி 19) புது தில்லியில் உள்ள கிழக்கு கிட்வாய் நகர், வகை II குடியிருப்புகளில், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், மக்களுக்கு நாற்காலிகளை வழங்கினர். அரவிந்த் கேஜரிவால்தான் இந்த நாற்காலிகளை வழங்கச் சொன்னதாகவும் கூறியுள்ளனர்.

இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதால் கேஜரிவால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அளித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக பாஜக வேட்பாளர்கள், தில்லி மக்களுக்கு சேலை, நகை உள்ளிட்டவற்றை வழங்குவதாக கேஜரிவால் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT