கைது செய்யப்பட்ட  
இந்தியா

ரூ.6-க்கு தேநீர், ரூ.60-க்கு புர்ஜி பாவ்: சைஃப் அலிகான் வழக்கில் குற்றவாளி பிடிபட்டது எப்படி?

ரூ.6க்கு தேநீர், ரூ.60க்கு புர்ஜி பாவ் வாங்கியதை வைத்து, சைஃப் அலிகான் வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

DIN

மும்பை: நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்து அவரை கத்தியால் குத்திய வழக்கில் கைதான குற்றவாளி, மிகக் கொடுமையான ஏழ்மை காரணமாகவே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டுக்குள் ஊடுருவிய மர்மநபர், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் பின்னணி மற்றும் அவரைக் கண்டுபிடித்தது எப்படி என்பது குறித்த தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது.

அவர், சைஃப் அலிகான் வீடு என்று தெரிந்தெல்லாம் நுழையவில்லை. தோராயமாக ஒரு வீட்டை தெரிவு செய்திருக்கிறார். தானேவில் இயங்கி வந்த உணவகத்தில் பணியாற்றி வந்த ஷரிஃபுல், ஒப்பந்ததாரரின் ஒப்பந்தக் காலம் முடிந்துவிட்டதால் வேலையை இழந்துள்ளார். அதன்பிறகு, அவர் வறுமையில் உழன்றுள்ளார்.

வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்தபோது ஷரிஃபுல், சைஃப் அலிகானை ஆறு முறை கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று வீடு திரும்பினார்.

முகமது ஷரிஃபுல் என்ற அந்த நபர் தனது கிராமத்திற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது தானே பகுதியில் கைது செய்யப்பட்டார். அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒரு உணவகத்தில் பணியாற்றி ரூ.13 ஆயிரம் வருவாய் ஈட்டி வந்த நிலையில், அதில் வெறும் 1000 ரூபாயை தனக்காக வைத்துக்கொண்டு ரூ.12 ஆயிரத்தை தாயின் மருத்துவ செலவுக்கு அனுப்பி வந்துள்ளார். அந்த வேலை போனதும், கடுமையான வறுமை அவரை வாட்டியிருக்கிறது. இந்தநிலையில்தான் கொள்ளையடிக்கும் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், அவர் பணியாற்றி வந்த ஒப்பந்ததாரர் மூலம் அவரது இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சோதனை செய்ததில், ஒரு இ-வாலட் மூலம் வோர்லியில் அவர் ரூ.6க்கு தேநீர் வாங்கிய ரசீது கைப்பற்றப்பட்டது. அதன் மூலம், அவர் கடைசியாக எங்கிருந்தார் என்பதும், பிறகு அவர் ஜன. 18ஆம் தேதி ரூ.60 செலுத்தி புர்ஜி பாவ் வாங்கியதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதைவைத்தே, அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து கைது செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாஜக எம்பி மனோஜ் திவாரி கன்வாா் யாத்திரை

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

SCROLL FOR NEXT