கோப்புப் படம் 
இந்தியா

ம.பியில் வழக்கத்தை விட அதிக மழை..! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

மத்தியப் பிரதேசத்தின் 10 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பருமழை தொடங்கியது முதல், 55 மாவட்டங்களுக்கும் கடந்த ஜூன் 30 ஆம் தேதி வரையில், வழக்கத்தை விட 37 சதவிகிதம் அதிகமான மழை பெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தொடர்ந்து கனமழை அதிகரிப்பதால், குவாலியர், பிந்து, மொரேனா, ஷியோபூர், தாஷா, உமாரியா, திண்டோரி, கட்னி, மாண்ட்லா மற்றும் பன்னா ஆகிய 10 மாவட்டங்களுக்கு, அடுத்த 24 மணிநேரத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, குறிப்பிடப்பட்ட 10 மாவட்டங்களுக்கும் அடுத்த 24 மணி நேரத்தில் 63.5 மி.மீ. முதல் 203.2 மி.மீ. (2.5 இன்ச் முதல் 8 இன்ச்) அளவிலான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், நர்மதாபுரம், சிந்த்வாரா, பந்துரா, சியோனி மற்றும் பால்காட் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் வரும் நாள்களில் அதிகப்படியான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், வழிபாட்டுத் தலங்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் அதிகாரிகளுக்கு, மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.

SUMMARY

More rain than usual in MP. Orange alert for 10 districts!

இதையும் படிக்க: தெலங்கானா பாஜக தலைவராக ராம்சந்தர் ராவ் நியமனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்! ராகுல் எச்சரிக்கை

ரஷிய எண்ணெய் கொள்முதல் போருக்கான நிதியுதவி..! இந்தியா மீது டிரம்ப் ஆலோசகர் தாக்கு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுக்கு தயார்: உக்ரைன் அதிபர்

போர் நிறுத்த முதல்படி..! அமைதிப் பேச்சுவார்த்தை பணிகளைத் தொடங்கிய டிரம்ப்!

SCROLL FOR NEXT