மத்திய அமைச்சர் அமித் ஷா கோப்புப் படம்
இந்தியா

கேரளத்துக்கு அமித் ஷா வருகை! 3 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

கேரளத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருவதால், அங்குள்ள விமான நிலையத்தைச் சுற்றிலும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவை பறக்க அடுத்த 3 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கண்ணூர் மாவட்டத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஜூலை 12) விமானம் மூலம் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, 3 நாள்களுக்கு கண்ணூர் விமான நிலையத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்கு ட்ரோன்கள், பாராகிளைடர்கள், ராட்சச பலூன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் கே. விஜயன் தடை விதித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஜூலை 11) வெளியிடப்பட்ட அறிக்கையில், விமானம் பறப்பதற்கு அல்லது தரையிறங்குவதற்கு இடையூறாக அமையக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்துறை அமைச்சரின் வருகையைப் பற்றி வெளியான அறிக்கையில், தில்லி திரும்பும் முன்னர் கண்ணூரிலுள்ள பிரபல ராஜராஜேஸ்வரா கோயிலுக்கு அவர் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Due to the arrival of Union Home Minister Amit Shah in Kannur district of Kerala, the flying of drones and unmanned aircraft around the airport there has been banned for the next 3 days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக ஆட்சியில் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்: அமித் ஷா

தமிழ் அடையாளத்திற்கு முன்பு வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி

சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

நியூசிலாந்து பேட்டிங்: 6 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்திய அணி!

பல்கலை. தரவரிசையில் முதல் 500 இடங்களில் இந்தியா இல்லை: பிரதமர் மீது குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT