சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சந்தூ ராதோட் 
இந்தியா

ஹைதராபாத்தில் கம்யூனிஸ்ட் நிர்வாகி சுட்டுக்கொலை!

தெலங்கானாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தெலங்கானாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. சந்தூ ராதோட் (வயது 47). இவர், மலக்பேட் பகுதியிலுள்ள பூங்காவின் அருகில் இன்று (ஜூலை 15) காலை, தனது வழக்கமான நடைப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

அப்போது, அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சந்தூ ராதோடின் மீது மிளகாய்ப் பொடியை வீசி, துப்பாக்கியால் சுட்டு, தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில், பலத்த காயமடைந்த சந்தூ ராதோட், சம்பவயிடத்திலேயே பரிதாபமாகப் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சம்பவயிடத்துக்கு விரைந்த காவல் துறையினர், சந்தூ ராதோடின் உடலைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: டெஸ்லாவின் முதல் ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டது!

A Communist Party of India official has been shot dead by unidentified assailants in Hyderabad, Telangana.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவர்களை விளையாட்டுத் துறையில் சாதிக்க ஊக்குவிக்கும் அரசு: அன்பில் மகேஸ்

அமேசான் பணி நீக்கம்: இந்தியாவில் 1,000 பேர் வேலை இழக்கலாம்!

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: தேஜஸ்வி

தென்காசியில் சிலம்பம் சுற்றிய முதல்வர் ஸ்டாலின்!

மா இன்டி பங்காரம்: இயக்குநர் நந்தினியுடன் 3வது முறையாக இணையும் சமந்தா!

SCROLL FOR NEXT