கோப்புப் படம் 
இந்தியா

பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!

பிகாரில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலியாகியுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், மின்னல் பாய்ந்து 19 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில், மட்டும் 19 பேர் மின்னல் பாய்ந்து பலியாகியுள்ளதாக, அம்மாநிலத்தின் முதல்வர் அலுவலகம் இன்று (ஜூலை 17) தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதிகப்படியாக நலந்தா மாவட்டத்தில் 5 பேரும், வைஷாலியில் 4 பேரும், பாங்கா மற்றும் பாட்னா ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் மின்னல் பாய்ந்து பலியாகியுள்ளனர்.

இத்துடன், ஷேயிக்புரா, நவடா, ஜெஹானாபாட், அவூரங்காபாத், ஜாமுயி மற்றும் சமாஸ்டிபூர் ஆகிய மாவட்டங்களிலும் தலா ஒருவர் பலியாகியது பதிவாகியுள்ளது. இதையடுத்து, மோசமான வானிலைகளின் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, தனது இரங்கல்களைத் தெரிவித்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பரோல் கைதியை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்! மருத்துவமனையில் பயங்கரம்!

It is reported that 19 people have been killed by lightning in Bihar in the last 24 hours alone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வு: பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை

மழைக்கால மின்விபத்து உயிரிழப்புகள்!

இந்தியாவுக்கு 2024 வரை வந்த அண்டை நாட்டு சிறுபான்மையினா் ஆவணமின்றி தங்க அனுமதி: மத்திய அரசு

‘மகிழ்ச்சியான தருணம் துயரமானதாக மாறியது’

‘உங்களுடன் ஸ்டாலின் முகாமில்’ கிராம நிா்வாக அலுவலா்-முதியவா் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

SCROLL FOR NEXT