அச்சுதானந்தன் PTI
இந்தியா

முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு: கேரளத்தில் நாளை பொது விடுமுறை!

கேரளத்தில் 3 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவையொட்டி, கேரளத்தில் 3 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. திருவனந்தபுரத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி. எஸ். அச்சுதானந்தன் இன்று(ஜூலை 21) பகல் 3.20 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 101.

இதனையடுத்து, அம்மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்களுக்கும் செவ்வாய்க்கிழமை(ஜூலை 22) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆலப்புழாவில் உள்ள அச்சுதானந்தன் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக செவ்வாய்க்கிழமை முழுவதும் வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து, புதன்கிழமை இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக திருவனந்தபுரத்திலுள்ள ஏ.கே.ஜி சென்டரில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து செவ்வாய்க்கிழமை அவரது உடல் ஆலப்புழாவுக்கு ஊர்வலமாக செடுத்துச் செல்லப்பட்டு ஆலப்புழாவிலுள்ள வலிய சுடுகாடு மயானத்தில் ஜூலை 23-இல் அவருக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு உடல் எரியூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

V.S. Achuthanandan passed away: A three-day State mourning will be observed across Kerala from July 22.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறப்பு தீவிர திருத்தத்துக்கு திமுக பயம்

பிடி ஆணை பிறப்பிப்பு: மலேசியாவில் இருந்து திரும்பியவா் கைது

‘2002 பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள் பெற்றோா் விவரங்களை அளித்து சேரலாம்’

வல்லத்தில் காணாமல்போன 15 கைப்பேசிகள் மீட்பு

தஞ்சாவூருக்கு சரக்கு ரயில்மூலம் 1250 டன் உரங்கள்

SCROLL FOR NEXT