முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு: கேரளத்தில் நாளை பொது விடுமுறை!
கேரளத்தில் 3 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவையொட்டி, கேரளத்தில் 3 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. திருவனந்தபுரத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி. எஸ். அச்சுதானந்தன் இன்று(ஜூலை 21) பகல் 3.20 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 101.
இதனையடுத்து, அம்மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்களுக்கும் செவ்வாய்க்கிழமை(ஜூலை 22) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆலப்புழாவில் உள்ள அச்சுதானந்தன் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக செவ்வாய்க்கிழமை முழுவதும் வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து, புதன்கிழமை இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அன்னாரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக திருவனந்தபுரத்திலுள்ள ஏ.கே.ஜி சென்டரில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து செவ்வாய்க்கிழமை அவரது உடல் ஆலப்புழாவுக்கு ஊர்வலமாக செடுத்துச் செல்லப்பட்டு ஆலப்புழாவிலுள்ள வலிய சுடுகாடு மயானத்தில் ஜூலை 23-இல் அவருக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு உடல் எரியூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!
V.S. Achuthanandan passed away: A three-day State mourning will be observed across Kerala from July 22.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.