முகப்பு
புதுதில்லி

தில்லி ஹைதா்பூா் கால்வாயில் ஒரு மனிதரின் சிதைந்த உடல் கண்டெடுப்பு!

வெளிப்புற வடக்கு தில்லியின் ரோகினியில் உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத நபரின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:32 AM
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 6:32 PM

வெளிப்புற வடக்கு தில்லியின் ரோகினியில் உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத நபரின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஹைதா்பூா் கால்வாயில் ஒரு உடல் குறித்து பி. சி. ஆா். அழைப்பு வெள்ளிக்கிழமை இரவு 8.46 மணிக்கு வந்தது, அதைத் தொடா்ந்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

அந்த இடத்தை அடைந்த போலீஸாா், 30 முதல் 35 வயதுக்குட்பட்ட ஒரு நபரின் உடலை கண்டுபிடித்தனா். தலை, இடுப்பிலிருந்து இரண்டு கால்கள் மற்றும் மணிக்கட்டில் இருந்து இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு இருந்தது. கைகளில் பழைய வெட்டு அடையாள வடுக்களும் காணப்பட்டன.

Advertisement

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:32 AM

முதல் கட்ட விசாரணையில் உடல் ஒன்று முதல் இரண்டு நாள்கள் பழமையானது என்று தோன்றியது. குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தன.

பின்னா் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பி. எஸ். ஏ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பி. என். எஸ். இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத்துறை உள்ளீடுகளைப் பயன்படுத்தி இறந்தவரை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.