இந்தியா

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது

Din

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘வங்கதேசத்தின் இடைக்கால அரசு இந்த சம்பவங்களை முழுமையாக விசாரித்து, கொலை, தீவைப்பு மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் நீதியின்முன் நிறுத்தும் என்று எதிா்பாா்க்கிறோம்.

சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து வங்கதேச அதிகாரிகளிடம் இந்தியா பல்வேறு வழிகளில் தொடா்ந்து எடுத்துரைத்துள்ளது. சிறுபான்மையினா் உள்பட வங்கதேசத்தின் அனைத்து குடிமக்களின் உயிருக்கும், சுதந்திரத்துக்கும் பாதுகாப்பு அளிக்கும் முதன்மை பொறுப்பு வங்கதேச அரசுக்கு உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

ஆங்கிலப் பெயர் பலகைகளை அடித்து நொறுக்கிய தமிழ் உரிமை இயக்கத்தினர்!

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

பிணைக் கைதிகளின் விடுதலைக்கான நம்பிக்கையை நெதன்யாகு கொன்று விட்டார்: கத்தார் பிரதமர்!

தனது அபார பந்துவீச்சுக்கான ரகசியம் பகிர்ந்த ஷிவம் துபே!

சார்லி கிர்க்கைக் கொன்றவர் யார்? இன்னும் துப்பு துலங்கவில்லை!

SCROLL FOR NEXT