மாலத்தீவு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
மாலத்தீவு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டதைப் பற்றி...
பிரிட்டன் பயணத்தை முடித்துக் கொண்டு 2 அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவுக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தலைமையில், வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் உடனிருந்தனர்.
பிரதமர் மோடியை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.
Advertisement
Advertisement
அதிபர் முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் மாலத்தீவின் 60-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணம், பிரதமராக நரேந்திர மோடியின் மூன்றாவது மாலத்தீவு பயணமாகவும், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பதவியேற்ற பிறகு வெளிநாட்டுத் தலைவரின் முதல் பயணமாகவும் இது அமைந்துள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, மாலத்தீவு தலைநகர் மாலேயில் வண்ணமயமான பதாகைகள், சுவரொட்டிகள், தெருக்கள் முழுவதும் இந்திய தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மாலத்தீவில் வசிக்கும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோர் விமான நிலையத்தில் கூடி, இந்திய தேசியக் கொடியை அசைத்து பிரதமரை வரவேற்றனர்.
PM Narendra Modi arrives in Male, Maldives on a two-day official visit
இதையும் படிக்க | தங்கம் விலை: எவ்வளவு குறைந்தது?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.