உயிர்தப்பிய விமானி.  
இந்தியா

ஹரியாணாவில் போர் விமானம் விபத்து- உயிர்தப்பிய விமானி

ஹரியாணாவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஹரியாணாவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம், அம்பாலாவில் இருந்து வழக்கமான பயிற்சிக்கு சென்ற இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் மோர்னி மலைகளுக்கு அருகே வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

விழுந்த வேகத்தில் விமானம் உடனே தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்கு முன்பாக விமானி பாராசூட் உதவியுடள் பத்திரமாக குதித்ததால் உயிர் தப்பினார்.

இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! இறுதி வரை போராடிய குடும்பத்தினர்!

ஹரியாணா காவல்துறை துணை ஆணையர் ஹிமாத்ரி கௌசிக், பஞ்ச்குலா மாவட்டத்தின் ராய்புர்ராணி பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக பிடிஐயிடம் தெரிவித்தார்.

இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், விமானம் வழக்கமான பயிற்சியில் இருந்தபோது விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது.

சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று அந்த பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மைலம்பாடி அரசுப் பள்ளியில் 109 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

மத்திய பாஜக கட்டுப்பாட்டில் புதுச்சேரி மாநில அரசு: காங்கிரஸ் தேசிய செய்தி தொடா்பாளா்

பள்ளிக் கட்டண நிா்ணயம்: நடைமுறை திருத்தங்களை அறிவித்தது தில்லி அரசு!

அந்தியூா் பேரூராட்சியில் ரூ.1.11 கோடியில் தாா் சாலை பணிகள் தொடக்கம்

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க தமாகா கோரிக்கை

SCROLL FOR NEXT