கோப்புப் படம் 
இந்தியா

சிங்கப்பூர்: போதைப் பொருள் பயன்படுத்திய இந்தியருக்கு 2 ஆண்டு சிறை!

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் 22 மாதங்கள் சிறையுடன், ரூ. 12.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு

DIN

சிங்கப்பூரில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் இந்தியருக்கு சுமார் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நிரந்தரமாகக் குடியேறிய சாஜன் ஓபராய் (35) மீது 15 வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், 5 குற்றச்சாட்டுகளுக்கு உண்மையை ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஒரு வருடம் மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு 18,500 சிங்கப்பூர் டாலர் (ரூ. 12.1 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது.

போதைப் பொருள் பயன்படுத்தியது, வணிக வளாகத்திலிருந்து மதுப் புட்டிகளைத் திருடியது, உணவு விடுதியில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட புகார்களில் சாஜன் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, கைவினைஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இன்று 17 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

உயிரி எரிபொருளால் என்ஜின் பாதிப்பா? மத்திய அமைச்சா் திட்டவட்ட மறுப்பு

காகித, அட்டை இறக்குமதி 8% அதிகரிப்பு

எம் & எம் வாகன விற்பனை சரிவு

SCROLL FOR NEXT