பிரதமர் நரேந்திர மோடி கோப்புப் படம்
இந்தியா

தன்கரின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

DIN

பிரதமர் மோடி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு (73), நள்ளிரவு 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ,பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று ஜக்தீப் தன்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன்.

அவர் நல்ல உடல்நலம் பெறவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவும் தங்கரின் உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT