பிரதிப் படம் ENS
இந்தியா

ஐபிஎல்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

DIN

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்தப்படுவதாக மும்பை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவரை கைது செய்தனர். மேலும், ரூ. 2.6 லட்சம் மதிப்பிலான மின்னணு சாதனங்களையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவர் மீதும் மகாராஷ்டிர சூதாட்டத் தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT