பிரதமர் மோடி-பவன் கல்யாண்.  
இந்தியா

அரசு நிகழ்ச்சியில் பவன் கல்யாணுக்கு இருமல் மிட்டாய் கொடுத்த பிரதமர் மோடி

ஆந்திரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு பிரதமர் மோடி இருமல் மிட்டாய் கொடுத்தார்.

DIN

ஆந்திரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு பிரதமர் மோடி இருமல் மிட்டாய் கொடுத்தார்.

ஆந்திர பிரதேசத்தில் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவது உள்ளிட்ட ரூ.58,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைநகரில் அமைய உள்ள உள்கட்டமைப்புகள், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், பாதுகாப்புத் துறை சார்ந்த உள்கட்டமைப்புகள் உள்பட 94 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது துணை முதல்வர் பவண் கல்யாணுக்கு திடீரென இருமல் ஏற்பட்டது.

இதனால் அவரது உரையில் சிறிது இடையூறு ஏற்பட்டது. இதைக் கவனித்த பிரதமர் மோடி, உடனடியாக தனது வசம் இருந்த இருமல் மிட்டாய் ஒன்றை பவன் கல்யாணிடம் வழங்கினார்.

அப்போது, இதைச் சாப்பிட்டு தண்ணீர் குடிக்கவும் என்று பவண் கல்யாணுக்கு பிரதமர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. பிரதமரின் இந்த செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் கவனம் பெற்றது. தற்போது இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வைராகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

SCROLL FOR NEXT