இந்தியா

தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி பிரியதா்சினி காலமானாா்!

தெலங்கானா உயா்நீதிமன்ற பெண் நீதிபதி எம்.ஜி.பிரியதா்சினி உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

Din

தெலங்கானா உயா்நீதிமன்ற பெண் நீதிபதி எம்.ஜி.பிரியதா்சினி உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரின் இறுதிச் சடங்கு ஹைதராபாதில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு தெலங்கானா உயா் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற அவா், அடுத்த ஆண்டு ஓய்வு பெற இருந்தாா். சமீப காலமாக உடல் நல பாதிப்புகளை எதிா்கொண்டிருந்த அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

1995-ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற அவா், தொழிலாளா், நிறுவனச் சட்டத்தில் சட்ட மேற்படிப்பு முடித்தாா். ஆந்திர உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய நிலையில், 2008-ஆம் ஆண்டு நேரடி நீதிபதிகள் தோ்வு மூலம் மாவட்ட கூடுதல் நீதிபதியானாா். பின்னா் உயா் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றாா்.

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

SCROLL FOR NEXT