கோப்புப் படம் 
இந்தியா

கழிப்பறை அடைப்பால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

கனடாவிலிருந்து தில்லி நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் அவசரமாக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டதைப் பற்றி...

DIN

கனடாவிலிருந்து தில்லி நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறை அடைக்கப்பட்டதினால் அவசரமாக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டது.

கனடாவின் டொராண்டோ நகரிலிருந்து தில்லி நோக்கி சுமார் 250 பயணிகளுடன் கடந்த மே.2 ஆம் தேதியன்று ஏர் இந்தியா விமானம் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, அந்த விமானத்தின் கழிப்பறைகளில் அடைப்பு ஏற்பட்டதினால் அவசரமாக ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அங்கு அந்த விமானத்தில் அடைக்கப்பட்ட கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு சுமார் 2 மணி நேர தாமதத்துக்கு பின்னர் மீண்டும் அதன் பயணம் தொடங்கி தில்லி வந்தடைந்துள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மே-2 ஆம் தேதியன்று டொராண்டோவிலிருந்து தில்லிக்கு இயக்கப்பட்ட ஏர்-இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் ஃப்ராங்க்ஃபர்ட்டில் தரையிறக்கப்பட்டது என்றும் ஆனால் அது சரி செய்யப்பட்ட சுமார் 2 மணி நேரத்துக்கு பின் தில்லி-க்கு புறப்பட்டு சென்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மார்ச் 6 ஆம் தேதியன்று சிகாகோ நகரிலிருந்து தில்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானம் ஒன்றின் 12 கழிப்பறைகளில் 8-ல் அடைப்பு ஏற்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாக். எல்லையில் பதற்றம்: இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT