அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோப்புப் படம்
இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும்: டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும் என்று டிரம்ப் நம்பிக்கை

DIN

பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய மாநில முதல்வர்கள் உள்பட பலரும், தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டு வருகின்றனர்.

இந்தத் தாக்குதலைக் குறிப்பிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது, ``பாகிஸ்தான் மீது இந்தியாவின் தாக்குதல் குறித்து அறிந்தேன். இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இதனிடையே, தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோவுடன் தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் ஆலோசித்து வருகிறார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே குறிவைத்து, தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்தாலும், பாகிஸ்தானில் 3 பகுதிகளை தாக்கியதாக அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் விவரங்கள் வெளியிடப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில்.. இம்ரான் கானின் விடுதலைக்காக சுதந்திர நாளன்று 2-ம் கட்ட போராட்டம்!

பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்!

கவனக்குறைவாக விளையாடுவது பேஸ்பால் தத்துவமல்ல..! கிரேக் சேப்பல் விமர்சனம்!

ஆசியக் கோப்பைக்கு முன் டி20 அணிக்கு திரும்பும் ஷுப்மல் கில்! ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சனுக்கு சிக்கல்!

அழகும் கலையும்... கோமதி பிரியா!

SCROLL FOR NEXT