கோப்புப்படம்.  
இந்தியா

உத்தரகண்டில் முதல் எஃப்எம் வானொலி நிலையம் தொடக்கி வைப்பு

உத்தரகண்டின் பித்தோராகர் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தால் இயக்கப்படும் முதல் எஃப்எம் வானொலி நிலையம் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.

DIN

உத்தரகண்டின் பித்தோராகர் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தால் இயக்கப்படும் முதல் எஃப்எம் வானொலி நிலையம் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.

இதனை ராணுவத்தின் மத்திய கட்டளையின் பொது அதிகாரி அனிந்தியா சென்குப்தா தொடங்கி வைத்தார். இதுகுறித்து வானொலி நிலையத்தின் மேலாளர் மணீஷ் சிங்கால் கூறுகையில், இந்திய ராணுவத்திற்கும் எல்லைப் பகுதி மக்களுக்கும் இடையே நல்லெண்ணத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.

ஆபரேஷன் சத்பாவனா'வின் கீழ் இயக்கப்படும் சமூக வானொலி நிலையத்திற்கு 'பஞ்ச்சுல் பல்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 88.4 என்கிற அலைவரிசையில் எஃப்எம் ஒலிபரப்பப்படும். இந்திய ராணுவத்தின் 'பஞ்ச்சுல் படைப்பிரிவின்' ராணுவ பொதுப் பள்ளியில் இருந்து இந்த வானொலி நிலையம் இயக்கப்படுகிறது.

பொறியியல் கலந்தாய்வு: 2.34 லட்சம் பேர் விண்ணப்பம்

வானொலி நிலையத்திலிருந்து 12 கிமீ சுற்றளவில் உள்ள மக்களால் வானொலியைக் கேட்க முடியும். உள்ளூர் வரலாறு, கலாசாரம், சமூகம் மற்றும் விவசாயம், தோட்டக்கலை போன்ற எல்லைப் பகுதி மக்களின் தொழில்களில் இதன் நிகழ்ச்சிகள் சிறப்பு கவனம் செலுத்தும்.

மேலும் தியாகிகள், துணிச்சலான வீரர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக மற்றும் கலாசாரத் துறைகளில் பணியாற்றியவர்களின் சாதனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இது கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்!

அழகு புயல்.. நிகிதா ஷர்மா!

வான்வழித் தாக்குதலில் போகோ ஹராம் மூத்த தலைவர் கொலை! நைஜர் ராணுவம் அறிவிப்பு!

தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன்: அமித் ஷா

ஸ்டாலின் அண்ணாச்சி, உங்கள் வாக்குறுதி என்னாச்சி? நயினார் நாகேந்திரன் அடுக்கிய கேள்விகள்!

SCROLL FOR NEXT