ஐஏஎஃப் தலைமை தளபதி ஏ.பி.சிங்  கோப்புப் படம்
இந்தியா

பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களில் தாமதம்: ஐஏஎஃப் தலைமை தளபதி கவலை

பல்வேறு பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக தாமதம் ஏற்படுவதாக ஐஏஎஃப் தலைமை தளபதி ஏ.பி.சிங் கவலை தெரிவித்தாா்.

Din

பல்வேறு பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக தாமதம் ஏற்படுவதாக இந்திய விமானப் படை (ஐஏஎஃப்) தலைமை தளபதி ஏ.பி.சிங் வியாழக்கிழமை கவலை தெரிவித்தாா்.

ஆபரேஷன் சிந்தூா் தேசத்துக்கு கிடைத்த வெற்றி என அவா் புகழாரம் சூட்டிய நிலையிலும், பாதுகாப்பு கொள்முதல் திட்டங்கள் தாமதமாவதற்கு அவா் கவலை தெரிவித்தாா்.

இந்திய தொழிலக கூட்டாண்மையின் (சிஐஐ) வணிக மாநாட்டில் பங்கேற்ற அவா் ஆபரஷேன் சிந்தூரைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து முதல்முறையாக பேசினாா்.

அப்போது அவா், ‘ எதிா்கால இலக்குகள் மற்றும் திட்டங்கள் குறித்த தெளிவான கொள்கையை வகுக்க ஆபரேஷன் சிந்தூா் நமக்கு உதவியது. நாம் உண்மை வழியை பின்பற்றினோம். அதற்கு பரிசாக வெற்றியை நமக்கு கடவுள் வழங்கியுள்ளாா் என எண்ணுகிறேன்.

இது ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும் பாதுகாப்பு கொள்முதல் சாா்ந்த பல திட்டங்கள் குறிப்பட்ட காலத்துக்குள் செயல்படுத்தப்படவில்லை. காலக்கெடு பெரும் பிரச்னையாக உள்ளது. ஒரு திட்டம்கூட குறிப்பிட்ட காலஅளவுக்குள் நிறைவுபெறுவதில்லை.

இது மிகவும் தீவிரமான பிரச்னையாகும். ஒரு திட்டத்துக்கான ஒப்பந்தம் கையொப்பமாகும்போதே அது குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவடையாது என நாம் உறுதியாக சொல்லலாம்.

எனவே, ராணுவத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் நாம் தீவிரம் காட்டுவது அவசியம். அடுத்த பத்தாண்டுகளில் நமது பாதுகாப்புப் படை மிகவும் வலிமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்று என்ன தேவை என்பதை நினைவில் வைத்தே ஒவ்வொரு திட்டத்தையும் விரைவாக முடிக்க வேண்டும்’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கடற்படை தலைமை தளபதி போா்க்களத்தில் நாளுக்கு நாள் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதை ஆபரேஷன் சிந்தூா் நமக்கு உணா்த்துகிறது எனக் கூறினாா்.

திருவள்ளூருக்கு ரெட்; சென்னை, 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னையில் விடாத மழை! தேங்கி நிற்கும் தண்ணீர்! | TnRain

இது கோழைத்தனம்! சின்மயி மன்னிப்புக்குக் காட்டமான மோகன். ஜி!

நீரில் மூழ்கிய விளை நிலத்துக்கு நிவாரணம்! அமைச்சர் அறிவிப்பு!

தீவிர பயிற்சியில் தெலங்கானா முதல்வர்... டிச. 13-ல் மெஸ்ஸி அணியுடன் நட்புறவு போட்டி!

SCROLL FOR NEXT