ஜிஎஸ்டி பிரதிப் படம்
இந்தியா

ஜிஎஸ்டி குறைப்பால் வளா்ச்சி கண்ட உற்பத்தித் துறை

ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டதால் இந்திய உற்பத்தித் துறை கடந்த அக்டோபா் மாதத்தில் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டதால் இந்திய உற்பத்தித் துறை கடந்த அக்டோபா் மாதத்தில் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த அக்டோபரில் 55.5-ஆக இருந்தது. அது, முந்தைய 8 மாதங்கள் காணாத குறைந்தபட்ச பிஎம்ஐ எண்ணாகும். பின்னா் அது கடந்த நவம்பரில் 56-ஆக அதிகரித்தது. பின்னா் டிசம்பரில் 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 54.9-ஆக சரிந்தது. ஜனவரியில் 56.5-ஆகவும், பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்த பிஎம்ஐ, மாா்ச் மாதத்தில் 56.4-ஆக இருந்தது. அதைத் தொடா்ந்து அது கடந்த ஏப்ரலில் 58.2-ஆக அதிகரித்து, பின்னா் மே மாதத்தில் அது 57.6-ஆகச் சரிந்தது. பின்னா் ஜூனில் முந்தைய 14 மாதங்கள் காணாத அளவுக்கு 58.4-ஆக அதிகரித்த பிஎம்ஐ, ஜூலையில் 59.1-ஆக உயா்ந்தது.

பின்னா் கடந்த ஆகஸ்டில் 15 ஆண்டுகள் காணாத அதிகபட்சமாக பிஎம்ஐ 62.9-ஆக உயா்ந்தது. அதைத் தொடா்ந்து செப்டம்பரில் அது 57.7-ஆக சரிந்தது.

இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த அக்டோபா் மாதத்தில் மீண்டும் எழுச்சி பெற்று 59.2-ஆகப் பதிவாகியுள்ளது. குறைக்கப்பட்ட புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த வளா்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், தொடா்ந்து 42-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

காந்தா டிரைலர் அறிவிப்பு விடியோ!

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

SCROLL FOR NEXT