மல்லிகார்ஜுன கார்கே  படம் - ANI
இந்தியா

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

பிரதமர் மோடி 11 ஆண்டுகளாக பதவியில் இருந்தும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என கார்கே விமர்சனம்.

இணையதளச் செய்திப் பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி 11 ஆண்டுகளாக பதவியில் இருந்தும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

''பிரதமர் மோடி காங்கிரஸை பற்றிப் பேசுகிறார், ஆனால் அவர் தனது சொந்த செயல்களை மறந்துவிட்டார்.

பணமதிப்பிழப்பு, கருப்புப் பணம், இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் ஆகியவற்றை அவர் மறந்துவிட்டார். அவர் அளித்த இந்தப் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.

இப்போது ஒரு கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நீங்கள் கடந்த 11 ஆண்டுகளாக பிரதமராக இருந்தீர்கள், இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.

பிரதமர் மோடி எப்போதும் பொய் சொல்கிறார். 'பொய்களின் தலைவர் என்று நரேந்திர மோடியை கூறலாம். அதனால்தான் எங்கும் பொய் கூறி வருகிறார்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

not been able to fulfil the promise of two crore jobs Congress Mallikarjun Kharge

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பையில் கிழக்கு-மேற்கு இணைப்பு மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!

நல்லகண்ணுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!

முன்அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது! - தவெக

பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன? ராமதாஸ் விளக்கம்!

பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல்! பாலின தேர்வு தடைச்சட்டம் - 1992

SCROLL FOR NEXT