பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி
ஆர்ஜேடி ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு சிறப்பு சலுகை.. தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி.
பிகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மகரசங்கராந்திக்கும் மகளிர் கணக்கில் ரூ.30 ஆயிரம் வரவு வைக்கப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறினார்.
பிகாரில் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இந்த நிலையில் பிகாரில் அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது,
Advertisement
Advertisement
ஆட்சியைக் கைப்பற்றினால், மாநிலத்தில் உள்ள அனைத்து முதன்மை விவசாயக் கடன் சங்கங்கள் மற்றும் முதன்மை சந்தைப்படுத்தல் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்களுக்கும் மக்கள் பிரநிதிகள் அந்தஸ்து வழங்கப்படும்.
மாநிலத்தில் 8,400-க்கும் மேற்பட்ட முதன்மை விவசாய கடன் சங்கங்கள் உள்ளன. விவசாயிகளுக்கு நீர்ப்பாசன நோக்கங்களுக்காக இலவச மின்சாரம் வழங்கப்படும். தற்போது விவசாயிகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 55 பைசா வசூலிக்கப்படுகிறது.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட போனஸாக ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.300ம், கோதுமைக்கு ரூ.400ம் வழங்கப்படும்.
மை-பஹான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ. 2,500 வரவு வைக்கப்படும் என்பதை ஏற்கெனவே உறுதியளித்துள்ளோம்.
அதோடு, வரும் ஜனவரி 14 ஆம் தேதி மகர சங்கராந்தி பண்டிகை மக்களுக்கு ஒரு புதிய ஆண்டு. பெண்களுக்காக அறிவித்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டு மகர சங்கராந்தியன்றும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.30 ஆயிரம் வரவு வைக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும், நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
RJD leader Tejashwi Yadav on Tuesday announced that farmers would be given Rs 300 per quintal of paddy and Rs 400 for wheat as a bonus over MSP, if the INDIA bloc comes to power in Bihar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.