நவம்பர் புரட்சியெல்லாம் இருக்காது: பதவி மாற்றம் குறித்து கர்நாடக துணை முதல்வர்!
கர்நாடகத்தில் முதல்வர் பதவி மாற்றம் குறித்து துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்...
கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படும் எனும் கருத்தை துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மீண்டும் மறுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. முதல்வர் சித்தாரமையா தலைமையிலான அமைச்சரவையில், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராகப் பதவி வகிக்கின்றார்.
இதில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி துவங்கி இம்மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவி உயர்த்தப்படுவார் எனவும், இந்த மாற்றத்தை நவம்பர் புரட்சி எனவும் அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவி வருகின்றது.
Advertisement
Advertisement
இந்தக் கருத்தை, முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நவம்பர் புரட்சி எல்லாம் இருக்காது எனக் கூறி முதல்வர் பதவியில் மாற்றமில்லை என்பதை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“நவம்பர் புரட்சியோ, டிசம்பர் புரட்சியோ அல்லது ஜனவரி, பிப்ரவரி புரட்சியெல்லாம் இருக்காது. எந்தவொரு புரட்சியாக இருந்தாலும் 2028 ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது மட்டுமே நடைபெறும்
யாரோ ஒருவர் எந்தவொரு காரணமும் இல்லாமல் இதை எழுதியுள்ளார். கட்சி எங்களுக்கு, பிகார் தேர்தல் உள்பட பல முக்கிய பொறுப்புகளைக் கொடுத்துள்ளது.
நாங்கள் கட்சியின் அறிவுறுத்தல்களை மட்டுமே பின்பற்றுவோம். அவர்தான் (சித்தராமையா) முதல்வர் என்றால், 5 ஆண்டுகளுக்கும் அவரே முதல்வராகத் தொடர்வார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பிகாரில் முதல்கட்ட வாக்குப் பதிவு நிறைவு!
Deputy Chief Minister D.K. Shivakumar has denied the idea that there will be a change in the Chief Minister's post in Karnataka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.