இந்தியா

வாக்குத் திருட்டு! தேர்தல் ஆணையத்தில் ராகுல் புகாரளிக்க பாஜக வலியுறுத்தல்!

வாக்குத் திருட்டு தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி கூறுவதாக பாஜக மறுப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

வாக்குத் திருட்டு தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பிகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் பேசுகையில், ``காங்கிரஸ் பழிபோடுவதற்கு எதுவுமில்லாததால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

பிகாரில் வாக்குகள் திருடப்படுவதாக அவர் நினைத்தால், அவர் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க வேண்டும். ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை.

அவர் வெறுமனே அரசியலமைப்புக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைக்கிறார்.

பாதுகாப்புப் படையினரில் இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். அவர்களை அரசியலுக்குள் இழுக்கக் கூடாது. இட ஒதுக்கீட்டை பாஜக ஆதரிக்கிறது. ஏழைகள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜஸ்னா சலீம்!

Vote chori allegation baseless, Rahul Gandhi should approach Election Commission with evidence: Union Minister Rajnath Singh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT