பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்  
இந்தியா

ரூ.2,095 கோடியில் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகள்: பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,095 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கையொப்பமிட்டது.

தினமணி செய்திச் சேவை

இந்திய ராணுவத்துக்கு பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளை கொள்முதல் செய்வதற்காக பொதுத் துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,095 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கையொப்பமிட்டது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இன்வாா் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளை கொள்முதல் செய்ய பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,095.70 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

லேசா் பொருத்தப்பட்டிருக்கும் இந்த ஆயுத அமைப்பு இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறனுடையது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் என். ராஜேந்திரன் காலமானாா்!

சா்வதேச நீரிழிவு நோய் தின விழிப்புணா்வு

நெல்லையில் 102 கிலோ புகையிலை பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

‘ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் போராட்டம்’ - ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா்

நயினாா் நாகேந்திரன் வீட்டை மா்மநபா்கள் நோட்டமா? போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT