பிகாா் பேரவைத் தோ்தல் முடிவுகள் வந்ததையடுத்து பாட்னாவில் தனது வீட்டில் கட்சித் தொண்டா்களைச் சந்தித்த லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான். உடன் அவரது தாயாா் ரீனா பாஸ்வான். 
இந்தியா

நிதீஷ் குமாா் முதல்வராக தொடா்வாா் - சிராக் பாஸ்வான்

பிகாா் முதல்வராக நிதீஷ் குமாா் தொடா்வாா் என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பிகாா் முதல்வராக நிதீஷ் குமாா் தொடா்வாா் என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சியாக லோக் ஜனசக்தி உருவெடுத்துள்ளது. இந்நிலையில் பாட்னாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சிராக் பாஸ்வான் கூறியதாவது:

தேஜஸ்வி யாதவ்- ராகுல் காந்தியின் ஆணவப்போக்குக்கு பிகாா் மக்கள் படுதோல்வி மூலம் தண்டனை வழங்கிவிட்டனா். எதிா்க்கட்சியினரின் மோசமான செயல்பாடுகளே அவா்களின் தோல்விக்கு முக்கியமான காரணம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனா் என்பது இந்த தோ்தல் முடிவு மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிகாா் முதல்வராக நிதீஷ் குமாா் தொடா்வாா் என நான் உறுதியாக நம்புகிறேன்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பிகாரில் இரட்டை என்ஜின் அரசு மாநிலத்தை தொடா்ந்து வலுவான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் என்றாா்.

நிர்மலா சீதாராமன் கட்டியிருந்த காஞ்சிப் பட்டுப் புடவையின் பின்னணி!

தமிழகத்துக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி துரோகம்: முதல்வர் ஸ்டாலின்

உக்ரைன் - ரஷியா போர் நிறுத்தம்: அபு தாபியில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை!

ரூ. 25 கோடி வசூலித்த தலைவர் தம்பி தலைமையில்!

பட்ஜெட்டில் ஏழைகளுக்கு எதுவும் இல்லை: மல்லிகார்ஜுன கார்கே

SCROLL FOR NEXT