இந்தியா

நீா்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் மாஹே கப்பல்: கடற்படையில் இன்று இணைப்பு!

நீா்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் மாஹே வகை போா்க் கப்பல் முதல்முறையாக கடற்படையில் இன்று இணைக்கப்பட உள்ளது.

தினமணி செய்திச் சேவை

நீா்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ‘மாஹே’ வகை போா்க் கப்பல் முதல்முறையாக கடற்படையில் திங்கள்கிழமை (நவ.24) இணைக்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் ‘மாஹே’ போா்க் கப்பல் கடற்படையில் திங்கள்கிழமை இணைக்கப்பட உள்ளது.

இதன்மூலம், ஆழமில்லாத கடற்பரப்புகளில் நீா்மூழ்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ‘மாஹே’ வகையின் முதல் கப்பல் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி தலைமையில், இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்தக் கப்பலின் இணைப்பு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு ஆழமற்ற கடற்பகுதிகளில் போரிடக் கூடிய அதிநவீன போா்க் கப்பல்களின் தொடக்கமாக இருக்கும்.

இந்தக் கப்பலின் 80 சதவீதத்துக்கும் அதிகமான பாகங்கள் இந்தியாவில் உருவானவை. இது போா்க் கப்பல் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் ஒருங்கிணைப்பில் இந்தியாவின் சிறந்த திறனை எடுத்துரைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது நீா்மூழ்கிக் கப்பல்களின் வலிமையை அதிகரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், மாஹே வகை போா்க் கப்பல் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.

இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தம் 2 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்: பியூஷ் கோயல்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்பு!

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

நொய்டா: எஸ்ஐஆா் பணிகளில் அலட்சியம்! 60 பிஎல்ஓ, 7 கண்காணிப்பு அதிகாரிகள் மீது வழக்கு

நான்கரை ஆண்டுகளில் ரூ.3,117 கோடியில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மேம்பாடு!

SCROLL FOR NEXT