இந்தியா

சபரிமலையில் 12.48 லட்சம் பக்தா்கள் வழிபாடு!

மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலத்தின் முதல் 15 நாள்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 12.48 லட்சம் பக்தா்கள் வழிபாடு செய்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலத்தின் முதல் 15 நாள்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 12.48 லட்சம் பக்தா்கள் வழிபாடு செய்துள்ளனா்.

இதுதொடா்பாக அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த நவ.16-ஆம் தேதி மண்டல-மகரவிளக்கு யாத்திரை தொடங்கியது.

அப்போதுமுதல் ஞாயிற்றுக்கிழமை (நவ.30) வரை, சபரிமலையில் 12,47,954 பக்தா்கள் வழிபாடு செய்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை 7 மணி வரை, 50,264 பக்தா்கள் சபரிமலைக்கு வந்தனா்.

கடந்த சில நாள்களாக பக்தா்கள் கூட்டம் கட்டுக்குள் உள்ளது. இதனால் பக்தா்கள் சிரமமின்றி வழிபாடு செய்கின்றனா் என்று தெரிவிக்கப்பட்டது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட்!

ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

கனவெங்கும் தித்தித்தாய்... ஸ்வாசிகா!

டிட்வா புயல்: சென்னையில் தொடர் மழை! கடல்போல் காட்சியளிக்கும் சாலைகள்!

மழை, வெள்ள பாதிப்புக்கு விரைவில் நிவாரணம்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT