கர்நாடகம்: ஓய்வுபெறும் கார் ஓட்டுநருக்கு ஓட்டுநராக மாறிய பல்கலை. பதிவாளர்
கர்நாடகத்தில் ஓய்வுபெறும் கார் ஓட்டுநருக்கு கர்நாடகப் பல்கலைக்கழக பதிவாளர் ஓட்டுநராக மாறிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் ஓய்வுபெறும் கார் ஓட்டுநருக்கு கர்நாடகப் பல்கலைக்கழக பதிவாளர் ஓட்டுநராக மாறிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுக்கு கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கார் ஓட்டுநராகப் பணியாற்றியவர் ருத்ரப்பா. இவர் நேற்றுடன் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஓய்வுபெறும் நாளில் பல்ககலைக்கழக பதிவாளர் நிஜலிங்கப்பா ஓட்டுநராக மாறி ருத்ரப்பாவையும் அவரது குடும்பத்தினரையும் காரில் ஏற்றி வீடு வரை ஓட்டிச்சென்றார்.
Advertisement
Advertisement
இது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தருணத்தை உருவாக்கியது. ஆரம்பத்தில் தற்காலிக ஓட்டுநராக பணியில் சேர்ந்த ருத்ரப்பா பின்னர் நாளடைவில் நிரந்தர ஓட்டுநராகப் பணியாற்றினார்.
ஒடிசா: அரசியலமைப்பின் மீது உறுதிமொழி எடுத்து திருமணம் செய்த தம்பதி
22 ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சேவைக்குப் பிறகு, அவர் அதிகாரப்பூர்வமாக நவம்பர் 29 ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
ஐந்து துணைவேந்தர்கள் மற்றும் ஆறு பதிவாளர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டமே. தான் பணிபுரிந்த ஒவ்வொரு அதிகாரியும் தன்னிடம் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டதாக ருத்ரப்பா தெரிவித்தார்.