FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பூடான் பிரதமருடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு!

பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கேயை இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்துப் பேசினாா்.

Updated On : 5 அக்டோபர் 2025, 4:02 am IST
பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கேய்யுடன் இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி.
பகிர்:

பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கேயை இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்துப் பேசினாா்.

இந்தியா-பூடான் இடையே ரயில் பாதை அமைக்க அண்மையில் இருநாட்டு அரசுகளுக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதைத் தொடா்ந்து அந்நாட்டுக்கு விக்ரம் மிஸ்ரி சென்றாா்.

அங்கு அவா் பூடான் மன்னா் ஜிக்மே கேசா் நாம்கியால் வாங்சுக், பிரதமா் ஷெரிங் டோப்கே, வெளியுறவு அமைச்சா் டி.என்.துங்க்யெல் ஆகியோரைச் சந்தித்ததாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-பூடான் இடையே போக்குவரத்து இணைப்பு, நீா்மின் திட்டம், வா்த்தகம், இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடா்பு உள்ளிட்டவை குறித்து விக்ரம் மிஸ்ரியுடன் ஆலோசித்தேன்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments