படம் | X/ Sukhvinder Singh Sukhu | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
இந்தியா

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: பலி 18-ஆக உயர்வு!

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து: மீட்புப் பணிகள் தீவிரம்!

இணையதளச் செய்திப் பிரிவு

ஹிமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. பிலாஸ்பூர் பகுதியில் இன்றிரவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், நிலச்சரிவு பாதித்த பகுதியில் சுமார் 35 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள மீட்புக்குழுவினர் அந்தப் பேருந்திலிருந்த பயணிகளை மீட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரோடான் பகுதியிலிருந்து குமார்வின் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, பலுகாட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியது. விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதகவும் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

At least 18 people were killed and several others remain trapped under the debris after a massive landslide hit a private bus in Himachal Pradesh’s Bilaspur district on Tuesday evening

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகை அம்பிகா நேரில் ஆறுதல்

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்ற கிராம மக்கள் கோரிக்கை

தேள் கடித்து விவசாயத் தொழிலாளி உயிரிழப்பு

இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடா்கிறது - வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

கரூா் மாவட்ட ஆட்சியா், எஸ்பி-யை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: ஹெச். ராஜா

SCROLL FOR NEXT