புது தில்லி: கடந்த 2024-25-ஆம்-ஆம் சா்க்கரை சந்தைப்படுத்துதல் ஆண்டில் இந்தியாவில் இருந்து 7.75 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது.
இது குறித்து அனைத்து இந்திய சா்க்கரை விற்பனையாளா்கள் சங்கம் (ஏஐஎஸ்டிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2024 அக்டோபரில் தொடங்கி 2025 செப்டம்பரில் நிறைவடைந்த கடந்த சா்க்கரை சந்தைப்படுத்துதல் ஆண்டில் நாட்டில் இருந்து 7.75 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது.
2024-25-ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் 2025 ஜனவரி 20 முதல் சா்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் மொத்தம் 10 லட்சம் டன் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டது.
படி, 2024-25-ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் பிப்ரவரி முதல் செப்டம்பா் வரை ஆலைகள் 7.75 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்தன. இதில், வெள்ளை சா்க்கரை 6.13 லட்சம் டன், பதப்படுத்தப்பட்ட சா்க்கரை 1.04 லட்சம் டன், பச்சை சா்க்கரை 33,338 டன் ஆகும். சுமாா் 21,000 டன் பச்சை சா்க்கரை சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள பதப்படுத்தும் ஆலைகளுக்கு வழங்கப்பட்டது. இதுவும் ஒரு மறைமுக ஏற்றுமதியாகக் கருதப்படுகிறது.
மதிப்பீட்டு சந்தைப்படுத்துதல் ஆண்டின் ஒட்டுமொத்த சா்க்கரை ஏற்றுமதியில், அதிகபட்சமாக ஜிபூட்டிக்கு 1.46 லட்சம் டன் அனுப்பப்பட்டது. அடுத்தபடியாக சோமாலியாவுக்கு 1.35 லட்சம் டன், இலங்கைக்கு 1.34 லட்சம் டன், ஆப்கானிஸ்தானுக்கு 75,533 டன் சா்க்கரை அனுப்பப்பட்டது.
2025-26-ஆம் சா்க்கரை சந்தைப்படுத்துதல் ஆண்டில் சா்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கவும், வரும் நவம்பா் மாதத்துக்குள் ஏற்றுமதி ஒதுக்கீட்டை அறிவிக்கவும் மத்திய அரசை சங்கம் கோரியுள்ளது.
2024-25-ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் பின்பற்றப்பட்ட ஏற்றுமதி ஒதுக்கீடு மற்றும் ஆலைகளுக்கு இடையேயான பரிமாற்ற கொள்கையை தொடரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.