‘மோந்தா' புயல் அடுத்த 2 மணி நேரத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரத்தின் மசூலிப்பட்டினத்துக்கும் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே காக்கிநாடாவுக்கு தெற்கே அடுத்த 2 மணி நேரத்தில் கரையைக் கடக்குமாம்.
இன்று(அக். 28) மாலை 9.30 மணி நிலவரப்படி, 6 மணி நேரமாக வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி(நிலப்பரப்பை நோக்கி) மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த இந்தப் புயல் மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியதாக தெரிவித்துள்ளது. அடுத்த 2 - 3 மணி நேரத்துக்குள் புயல் கரையைக் கடந்துவிடும் என்றும் எதிர்பார்ப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.