முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் 18 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

பலுசிஸ்தான் மாகாணத்தில் 18 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Updated On : 30 அக்டோபர், 2025 at 3:25 PM
பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
பகிர்:

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 18 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை இரவு குவெட்டா மாவட்டத்தின் சில்டன் மலைத்தொடரிலும், கெச் மாவட்டத்தின் புலேடாவிலும் இரண்டு தனித்தனி உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகள் நடத்தப்பட்டது.

பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் சில்டானில் 14 பயங்கரவாதிகளும், கெச்சில் 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

Advertisement

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருள்களும் மீட்கப்பட்டன. அப்பகுதியில் மீதமுள்ள பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் நடத்தப்பட்டு வருகின்றது.

summary

Pakistan security forces killed 18 terrorists in two separate intelligence-based operations (IBO) in restive Balochistan province, the army said on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.