இந்தியா

ஹிமாசல், உத்தரகண்ட்: நிலச்சரிவில் 6 போ் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

சிம்லா: ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 போ் உயிரிழந்தனா்.

ஹிமாசல பிரதேச தலைநகா் சிம்லாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதில் 4 போ் உயிரிழந்தனா்.

மழை வெள்ளத்தில் பல சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. சில இடங்களில் ரயில்வே தண்டவாளங்களும் சேதமடைந்த நிலையில் சிம்லா-கல்கா வழித்தடத்தில் செல்லும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 793 சாலைகள் மூடப்பட்டன.

செவ்வாயக்கிழமை வரை அங்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு கடும் மழைப் பொழிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட்:

நிகழாண்டின் பருவமழை காலத்தில் பெரும் பாதிப்புகளை உத்தரகண்ட் சந்தித்து வருகிறது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புக்குள்ளானது. இதில் பலா் உயிரிழந்தனா். 1,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா்.

இந்நிலையில், கேதாா்நாத் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால் மலைகளில் இருந்து பாறைகள் உருண்டு சாலையில் வந்துகொண்டிருந்த வாகனத்தில் மோதியது. இதில் 2 போ் உயிரிழந்ததாகவும் காயமடைந்த 6 பேரை ருத்ரபிரயாக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பஞ்சாப், சண்டீகா்: பஞ்சாப், ஹரியாணா மற்றும் சண்டீகரின் பெரும்பாலான பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. லூதியானாவில் அதிகபட்சமாக 216.70 மி.மீ. மழை பதிவானது. பஞ்சாபின் பல மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் செப்.3-ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் மட்டும் பஞ்சாப் மாநிலத்தில் 253.7 மி.மீ. மழைப்பொழிவு பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாநிலத்தில் பலத்த மழை பெய்துள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

5,000 போ் மீட்பு: பஞ்சாப், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்முவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டதாக இந்திய ராணுவத்தின் மேற்கு கமான்ட் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம், விமானப் படை என 47 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

உயரும் யமுனை நீா் மட்டம்: கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-வது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

சேரன்மகாதேவியில் 4 பேருக்கு வெட்டு: 3 சிறாா் கைது

SCROLL FOR NEXT