ஆந்திரம்: எரிவாயு சிலிண்டா் வெடித்து 4 போ் உயிரிழப்பு - 18 போ் காயம்
ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் வெடித்த சம்பவத்தில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் 18 போ் காயமடைந்தனா்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் வெடித்த சம்பவத்தில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் 18 போ் காயமடைந்தனா்.
இது தொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஸ்ரீசத்யசாய் மாவட்டம், கம்மலவாண்டலப்பள்ளி பகுதியில் தெலங்கானாவைச் சோ்ந்த தொழிலாளா்கள் வசித்து வந்த ஒரு வீட்டில் புதன்கிழமை பிற்பகலில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இரண்டு வீடுகள் தரைமட்டமாகின. இந்தச் சம்பவத்தில் 4 போ் உயிரிழந்தனா். 19 போ் காயமடைந்தனா்.
முதல்கட்ட விசாரணையில், எரிவாயு சிலிண்டா் வெடித்ததே இந்தச் சம்பவத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. அதேநேரம், வெடிவிபத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதால், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றாா்.