இந்தியா

42 பேரை படுகொலை செய்த ஹைட்டி சட்டவிரோத கும்பல்!

ஹைட்டியில் சட்டவிரோத கும்பலைச் சோ்ந்தவா்கள் மீன்பிடி கிராமமொன்றில் 42 பேரை படுகொலை செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஹைட்டியில் சட்டவிரோத கும்பலைச் சோ்ந்தவா்கள் மீன்பிடி கிராமமொன்றில் 42 பேரை படுகொலை செய்தனா்.

இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

லாபோட்ரீ கிராமத்தில் சட்டவிரோத கும்பல் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 42 போ் உயிரிழந்தனா். அவா்களில் 4 வயது குழந்தையும் அடங்கும். லாபோட்ரி கிராம வீடுகளுக்குத் தீவைத்துச் சென்ற அந்தக் கும்பல், அருகிலுள்ள ஆா்காஹாயியே கிராமத்துக்குள் நுழைய முயன்றது. ஆனால் அவா்களை அந்த கிராமத்தில் உள்ள தற்காப்பு ஆயுதக் குழுவினா் தடுத்து நிறுத்தியுள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

இதையடுத்து, பதற்றம் நிறைந்த பகுதிகளில் மக்களுக்கு ஆயுதம் அளிப்பதோடு விட்டுவிடாமல் அங்கு ராணுவமும் குவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போர்களை நிறுத்தினேன்; நான் தீர்க்காத ஒரே போர் இதுதான்! - டிரம்ப்

மோடியின் மணிப்பூர் பயணம் "கேலிக்கூத்தானது": ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

டி20 கிரிக்கெட்டில் 300 ரன்கள்: வரலாறு படைத்த இங்கிலாந்து!

ரெளடி டைம்... உதயநிதி!

இந்தியா மீதான வரி விதிப்பு மோதலை ஏற்படுத்துகிறது! - டிரம்ப்

SCROLL FOR NEXT