உத்தரப் பிரதேசத்தில் 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 19 வயது இளைஞர் பாலியல்ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 8 வயது என்பதால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அலிகரின் புறநகரில் 2-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு (8 வயது) அந்தப் பள்ளியின் காவலாளியின் மகன் கோலு (19 வயது) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கோலுவைக் கைதுசெய்த காவல் ஆய்வாளர் கமலேஷ் குமார் கூறியதாவது:
இரண்டாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுமியை வெள்ளிக்கிழமை கோலு என்பவர் அறையில் பூட்டி பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். இருப்பினும் அந்தச் சிறுமி அங்கிருந்து கூச்சலிட்டு, தப்பிச் சென்றிருக்கிறார்.
பின்னர், கோலுவை பிஎன்எஸ், போக்ஸோ விதிகளின்படி கைது செய்தோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.