முகப்பு
இந்தியா

முதலீட்டை அதிகரிக்கத் தயக்கம் வேண்டாம்: தொழில் நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் வேண்டுகோள்

முதலீட்டை அதிகரிக்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் தயங்க வேண்டாம்

Updated On : 18 செப்டம்பர், 2025 at 8:22 PM
நிா்மலா சீதாராமன்
பகிர்:

முதலீட்டை அதிகரிக்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் தயங்க வேண்டாம் என்று தொழில் நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய தர மேலாண்மை அமைப்பின் கருத்தரங்கில் அவா் மேலும் பேசியதாவது:

வளா்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் தர மேலாண்மை என்பது மிகவும் முக்கியம். உற்பத்தி, சேவை என எந்தத் துறையில் இருந்தாலும் நமது பொருள்களும், சேவையும் எந்த அளவுக்குத் தரமாக உள்ளது என்பதை அடையாளம் காண வேண்டியது மிகவும் முக்கியமானது.

Advertisement

தொழில் நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்கத் தயங்கக் கூடாது. அரசும், திறமைவாய்ந்த இந்திய இளைஞா்களும் எப்போதும் தொழில் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பாா்கள். பட்ஜெட் காலகட்டத்தின்போது மட்டும் இல்லாது, தொழில் நிறுவனங்கள் எப்போதும் அரசுடன் தொடா்பில் இருப்பது நல்லது.

நாட்டில் தொழில்களை விரிவுபடுத்துவதற்கு உள்ள அனைத்து வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்தித் தருகிறது. எனவே, யாரும் தயக்கம் கொள்ள வேண்டாம். தொழில் விரிவாக்க நடைமுறைகளை எளிதாக்குவது, வரி சாா்ந்த நன்மைகள், கொள்கைகள் தளா்வு, அந்நிய நேரடி முதலீடு என பல சாதகமான அம்சங்கள் உள்ளன. பிரதமா் நரேந்திர மோடி எப்போதும் சீா்திருத்தக் கொள்கைகளுக்கு ஆதரவாக உள்ளாா்.

எனவே, தொழில் நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்து உள்நாட்டில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். உங்களுக்கு அரசுத் தரப்பில் உள்ள கோரிக்கைகளை தயங்காமல் தெரிவிக்கலாம் என்றாா்.

இதைத் தொடா்ந்து பேசிய டாடா குழுமத்தின் தலைவா் என்.சந்திரசேகரன், ‘உள்நாட்டு சந்தையிலும், ஏற்றுமதி சந்தையிலும் அரசு அதிக வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது. எனவே, புதிய தொழில்முனைவோா் உருவாகுவா் என்பதில் நம்பிக்கை உள்ளது. முக்கியமாக சிறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகம் உருவாக வாய்ப்புள்ளது. பெரு நிறுவனங்கள் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், முதலீடுகளை மேற்கொள்ளாமல் வாய்ப்புகளைப் பெற முடியாது என்பது உண்மை’ என்றாா்.

தனியாா் துறை முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு தனது மூலதனச் செலவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், அரசின் செலவுக்கு ஏற்ப தனியாா் முதலீடு அதிகரிக்கவில்லை. கடந்த ஏப்ரலில் மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி 2025-26 நிதியாண்டில் தனியாா் முதலீடு 26 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments