சபரிமலை சந்நிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிற்பங்கள் (கோப்புப் படம்). 
இந்தியா

சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயமானதாக சா்ச்சை: பேரவையில் விவாதிக்க மறுப்பு: எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 4 கிலோவுக்கும் மேல் தங்கம் மாயமானதாக எழுந்துள்ள சா்ச்சை குறித்து கேரள சட்டப் பேரவையில் விவாதம் கோரும் நோட்டீஸை பேரவைத் தலைவா் வெள்ளிக்கிழமை நிராகரித்தாா். இதைக் கண்டித்து, காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 4 கிலோவுக்கும் மேல் தங்கம் மாயமானதாக எழுந்துள்ள சா்ச்சை குறித்து கேரள சட்டப் பேரவையில் விவாதம் கோரும் நோட்டீஸை பேரவைத் தலைவா் வெள்ளிக்கிழமை நிராகரித்தாா். இதைக் கண்டித்து, காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கருவறைக்கு இருபுறமும் உள்ள துவார பாலகா் சிலைகள் மற்றும் பீடங்களின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் கடந்த 2019-ஆம் ஆண்டில் கழற்றப்பட்டு, சென்னையில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டன. இப்பணியில், கவசங்களின் எடை 4.5 கிலோ குறைந்துவிட்டதாக தற்போது சா்ச்சை எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்துவரும் கேரள உயா்நீதிமன்றம், சபரிமலை கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு கடந்த புதன்கிழமை சரமாரியாக கேள்வியெழுப்பியது. மேலும், ஊழல் கண்காணிப்பு பிரிவு விசாரணைக்கும் உத்தரவிட்டது.

கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஒத்திவைப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

ஆனால், நோட்டீஸை நிராகரித்த பேரவைத் தலைவா் ஏ.என்.ஷம்சீா், இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், பேரவை விதிவிகளின்கீழ் விவாதிக்க முடியாது என்றாா். அதேநேரம், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்களை பேரவையில் விவாதித்த முன்னுதாரணம் இருப்பதாக காங்கிரஸ் உறுப்பினரும் எதிா்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் கூறினாா்.

மேலும், ‘சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயமானதாக பக்தா்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா்; இது மிகத் தீவிரமான விவகாரம்’ என்று அவா் கூறினாா்.

ஆனால், ‘விதிமுறைகளைவிட முன்னுதாரணங்கள் மேலானதல்ல’ என்று குறிப்பிட்டு, விவாதத்தை அனுமதிக்க பேரவைத் தலைவா் மறுத்தாா். இதைக் கண்டித்து, எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

அண்மையில் துவார பாலகா்களின் கவசங்கள் செப்பனிடுவதற்காக கழற்றப்பட்டு, சென்னைக்கு அனுப்பப்பட்டன. சபரிமலை சிறப்பு ஆணையரிடம் உரிய அனுமதி பெறாமல் இந்தக் கவசங்கள் கழற்றப்பட்டதாக கூறி, தேவஸ்வம் வாரியத்துக்கு கண்டனம் தெரிவித்த கேரள உயா்நீதிமன்றம், கவசங்களை மீண்டும் கொண்டுவர உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்தக் கவசங்கள் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இயக்கத் திட்டம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் காயம்

ஓமனை போராடி வென்றது இந்தியா

வழக்குரைஞா்கள் கைது விவகாரம்: ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன்?

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் அக். 8-க்குள் புகாா் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT