photo credit: PTI
இந்தியா

மும்பையில் ஆப்பிள் ஐபோனுக்காக சண்டையிட்ட இளைஞர்கள்

மும்பையில் ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக கூடியிருந்த இளைஞர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பையில் ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக கூடியிருந்த இளைஞர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 17 மாடலை இன்று அறிமுகப்படுதியுள்ளது. எந்தவொரு ஆப்பிள் ஸ்மார்ட்போனிலும் இல்லாத வகையில் மிகக்குறைந்த தடிமனில் (5.6 மி.மீ) இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது.

சாங்சங் கேலக்ஸி எட்ஜ் எஸ் 25 ஸ்மார்ட்போனைவிட (5.8 மி.மீ) இது குறைவாகும். இந்நிலையில் தில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஆப்பிள் ஸ்டார்களில் நேற்று நள்ளிரவு முதலே இளைஞர்கள் காத்திருந்தனர்.

ஆப்பிள் ஐபோன் 17 அறிமுகம்: நீண்ட வரிசையில் காத்திருக்கும் இளைஞர்கள்!

இன்று(செப்டம்பர் 19) ஐபோன் 17 அறிமுகப்படுத்தப்பட்டவுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

இந்த ஐபோனுக்காக இளைஞர்கள் சண்டையிட்டும் கொண்டனர். மும்பையின் பி.கே.சி ஜியோ சென்டரில் உள்ள ஆப்பிள் ஸ்டோரின் வெளியே ஐபோன் 17 வாங்குவதற்காக காத்திருந்த இளைஞர்களிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் தலையிட்டு அவர்களை சண்டையிலிருந்து விலக்கினர்.

The iPhone 17 launch in Mumbai turned chaotic when a scuffle broke out among fans at the BKC store. Watch the viral video and read about the frenzy that gripped the city.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேகமாக நிரம்பும் மோா்தானா அணை

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்: கன்சால்பேட்டை மக்கள் சாலை மறியல்

வாலாஜா ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிய ஆட்சியா்

ராணிப்பேட்டையில் அக்டோபா் முதல் வாரத்தில் புத்தகத் திருவிழா: துறைசாா் அலுவலா்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நகராட்சி மாா்க்கெட் புதிய கடைகள் ஏலத்தின் மூலமே ஒப்படைக்கப்படும்: அரக்கோணம் நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT