கோப்புப்படம்.  
இந்தியா

மங்களூரு: கஞ்சா வைத்திருந்ததாக கேரளத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் கைது

மங்களூருவில் கஞ்சா வைத்திருந்ததாக கேரளத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திச் சேவை

மங்களூருவில் கஞ்சா வைத்திருந்ததாக கேரளத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம், மங்களூருவில் ரகசிய தகவலின் பேரில் ஷீதல் அழகூர் தலைமையிலான மங்களூர் தெற்கு காவல் துறை குழு அட்டாவரில் உள்ள கப்ரிகுட்டே மசூதிக்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை மாலை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 12.26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்ட கஞ்சா ஒடிசாவில் இருந்து வரவழைக்கப்பட்டு ஏழு பார்சல்களில் அடைக்கப்பட்டிருந்தது. மேலும், ரூ.2,000 மதிப்பிலான எடை எந்திரங்கள் மற்றும் ரூ.1.05 லட்சம் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.3.52 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் 330 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்கள் அழிப்பு

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து கேரளத்தைச் சேர்ந்த 11 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காண தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் மேலும் கூறினர்.

Eleven second-year BBA students from Kerala were arrested in Mangaluru on charges of possessing and attempting to sell cannabis in commercial quantities, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினேஷ் பிறந்த நாள்... வேட்டுவம் கிளிம்ஸ் வெளியீடு!

Special day! ரேஸுக்கு முன் அஜித்குமார்! Exclusive!

‘கொள்ளை கலாசாரத்தில்’ இருந்து இந்தியாவைக் காப்பாற்றியிருக்கும் பாஜக: பிரதமர் மோடி

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் காலமானார்!

ஆழ்மனதில் உன்னை வை... கீர்த்தி!

SCROLL FOR NEXT