நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) உயா்ந்த, குறைந்த வருவாய் கொண்ட மாநிலங்கள் இடையே அதிக இடைவெளி காணப்படுவது கவலைக்குரியது என்று நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) சுமன் பெரி தெரிவித்தாா்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கல்லூரியில் 6-ஆவது பொருளாதார மாநாட்டையொட்டி, ‘இந்தியாவின் பெரும் சவால்: மிகப் பெரிய முதலீடு உந்துதல் மற்றும் நிதியளித்தல்’ என்ற தலைப்பில் சுமன் பெரி உரை நிகழ்த்தினாா். அப்போது, அவா் கூறியதாவது:
நாட்டின் 26 சதவீத மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்தும் உயா் வருவாய் கொண்ட மாநிலங்கள், நாட்டின் ஜிடிபி-க்கு 44 சதவீதம் பங்களிக்கின்றன. அதேநேரம், 38 சதவீத மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்தும் குறைந்த வருவாய் மாநிலங்கள், வெறும் 19 சதவீதமே பங்களிக்கின்றன. இந்த இடைவெளி கவலைக்குரியது.
தமிழகத்துக்கு பொருத்தமாக இருக்கக் கூடிய ஒரு பொருளாதார வியூகம், மேகாலயம், பிகாா் அல்லது உத்தர பிரதேசத்துக்கு மிக வேறுபட்டதாக இருக்கும். ஒரு பகுதி எந்த அளவுக்கு பின்தங்கியதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு வேகமாக முன்னேற முடியும் என்ற உலகளாவிய கண்ணோட்டத்தை இந்திய சூழலுக்கு கொண்டுவர விரும்புகிறேன். முன்பு பின்தங்கிய மாநிலங்களாக இருந்த பிகாா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகியவை இப்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எனவே, ஒரு மாநிலம் எப்போதுமே பின்தங்கியிருக்கும் என்று கருத முடியாது.
கடந்த 2017-18ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2022-23-இல் மொத்த வேலைவாய்ப்பு 15 கோடி அதிகரித்துள்ளது. இதில் விவசாய பெண் தொழிலாளா்கள் 8 கோடி போ், ஊதியம் பெறாத குடும்பத் தொழிலாளா்கள் 4 கோடி பேரும் அடங்குவா் என்று சுமன் பெரி தெரிவித்தாா்.