பிரதமர் நரேந்திர மோடி. (கோப்புப் படம்)
இந்தியா

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா! பிரதமர் மோடி பங்கேற்பு!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார்...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில், அம்பேத்கர் சர்வதேச மையத்தில், வரும் அக்டோர்பர் 1 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதுபற்றி, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1925 ஆம் ஆண்டு, மறைந்த கே.பி. ஹெட்கேவரினால் நாக்ப்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சைபர் குற்றங்களில் முதலிடம் தனிநபர் தகவல் திருட்டு!

It has been reported that Prime Minister Narendra Modi will participate as the special guest at the centenary celebrations of the RSS in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக். 3 பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுமா?

கரூர் செல்லாதது ஏன்? விடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்

திருவண்ணாமலை பாலியல் வன்கொடுமை: முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?

“கரூர் பலி: திட்டமிடப்பட்டதா?” அமைச்சர் Anbil Mahesh பதில்! | Karur | TVK | VIJAY | DMK

பாஜக கூட்டணியில் இணைவதற்கு பதில் ராஜிநாமா செய்துவிடுவேன்: ஒமர் அப்துல்லா!

SCROLL FOR NEXT